Aug 21, 2006

சங்கம்- கவிதைப் போட்டி(1)-கவிதை-4

மையிருட்டில் அமர்ந்து ஒரு முறை யோசித்தேன்,
இன்னும் என்ன மீதம் இருக்கிறது என் வாழ்வில்,
திறமைக்கேற்ற வேலை,
மனம் மகிழ கை நிறைய சம்பளம்,
சிறிதாய் இருந்தாலும் சிறப்பாய் ஒரு சொந்த வீடு,
ஆனாலும் அமைதியில்லை,
ஓரிடம் தங்காமல் அலைபாயுது மனது.

ஜன்னல் வழி நோக்கினேன்,
என் ஜன்னலின் வழியே சரிந்து முகம் காட்டி சிரித்தது நிலவு,
நிலவின் பிம்பம் என் மேஜை மேலே,
புன்னகை காட்டி மின்னலென
மனதில் தோன்றியது அவள் முகம்.

இன்னும் என் ஆகாயத்தில் நிலவு இல்லை?
பெளர்ணமி காண ஏங்குது என் காதல்.
சுறுசூறுப்பாய் அவளுக்கு எழுதி முடித்தேன் ஒரு காதல்(காவிய) கடிதம்,
கையெழுத்திட்டு நிமிர்ந்தேன்.

அட இன்னும் இருக்கிறது ஆகாயம்!!

#போட்டியாளர் சார்பாக பதிவிட்டது இளா...

0 ஊக்கங்கள்: