Aug 28, 2006

சங்கம்- கவிதைப் போட்டி(1)-கவிதை-6

கவிதையாமா கவிதை
மடக்கி போட்டு
திருப்பிப் போட்டு
ரெண்டு ரெண்டா படிச்சுக் காட்டு
அதான் தம்பி கவிதை

புரட்சியாமா புரட்சி
முக்கி முனகி
திக்கித் திணறி
கண்டதையும் பேசு
கைதட்டு வாங்கிட்டா
மறந்துடுடா ராசு
அதான் தம்பி புரட்சி

ரவுசுக்குனே பேசுறவனும் உண்டு
எதையெதையோ புலம்புறவனும் உண்டு
அர்த்தம் கெட்ட பருத்திகொட்டைகள்
பேசத்தானே செய்யும்
பேசிப் பேசி செத்துப் போனா
உலகம் எப்படி உய்யும்?

அறிவுரை சொல்லட்டுமா அய்யா?
தேவையில்லைன்னு சொல்லுறியா ங்கொய்யா!

அது...
காசில்லாம கிடைக்கும்
ஓசின்னாலும் கிடைக்கும்
ரெண்டுமே ஒண்ணா?

சீனு தம்பி சீனு
நீ கண்டுக்காத கண்ணு

ஏண்டா தலைப்புக்கு எழுதுன்னா
என்னடா சலம்புற?

இன்னாமே தலைப்பு?

"இன்னும் இருக்கிறது ஆகாயம்"

எழுதிகின்னா போவுது...

கிளம்புதுடா ராக்கெட்டு
குறிச்சுக்கடா மெனக்கெட்டு

ராசா....
மேலே மேலே போறேன்
அட நான் போயிகினே கீறேன்

காணமடா ராசா
ஆகாயத்த காணோம்


"இன்னும் இருக்கிறது ஆகாயம்"

வெளங்குச்சு!!!

பேண்ட் போட்ட யக்கா
அட மேல்த்தட்டு மக்கா
எங்கே எடுத்த சொக்கா?
சும்மா கீது சோக்கா

எங்க இருக்கு டப்பு?
சாப்ட்வேரு யப்பு!
அம்புட்டுதானா வளர்ச்சி
இன்னும் இருக்கா கிளர்ச்சி?

இல்லடா ராசு இல்ல

சேர்த்துகினே போலாம்
சொத்து சேர்த்துகினே போலாம்
எம்புட்டு தூரம் போலாம்
கணக்கில்லாம போலாம்
அப்போ எழுதிக்க
"இன்னும் இருகிறது ஆகாயம்"

வளருது நாடு
சூப்பரா
வளருது வீடு

படிச்சா தம்பி பாரின்னு
குடிடா நீயும் செம "ஜின்னு"

பில்டிங் மேல பில்டிங்கு
புளோரு மேல புளோரு

முட்டாத வரைக்கும் வானம்
தலையில தட்டாத வரைக்கும் வேணும்
ஸோ...


"இன்னும் இருக்கிறது ஆகாயம்"

இப்படியே கிறுக்கினா
வெளுத்துடும்டா சாயம்
முடிச்சுக்குடா சகாயம்

கடைசியா மட்டும்....


இன்னும் இருக்கிறது ஆகாயம்

அட போடா நீயும் வெங்காயம்.

- உட்டாலக்கடி பாட்டுக்காரன்

#போட்டியாளர் சார்பாக பதிவிட்டது இளா...

0 ஊக்கங்கள்: