Sep 1, 2006

சங்கம்- கவிதைப் போட்டி(1)-கவிதை- 30

கைக்குழந்தையுடன் நாற்சந்தியில் கை ஏந்துபவளுக்கும்
குப்பைமேட்டில் களஞ்சியம் தேடுபவனுக்கும்
இரவின் வெளியில் சுற்றியலையும் சித்தனுக்கும்
சொத்திழந்தவனுக்கும் சுயபுத்தி பிறழ்ந்தவனுக்கும்
வீட்டைத் துறந்தவனுக்கும் துரத்திவிடப் பட்டவனுக்கும்
இன்னும் இருக்கிறது ஆகாயம்

அவர்தம் வீட்டுக் கூரையாக!

#போட்டியாளர் சார்பாக பதிவிட்டது இளா...

2 ஊக்கங்கள்:

said...

/*அவர்தம் வீட்டுக் கூரையாக!*/

அருமையான சிந்தனை

said...

/*அவர்தம் வீட்டுக் கூரையாக!*/

இது நல்லா இருக்குங்க