Sep 1, 2006

கவிதை போட்டி-1 : போட்டியில் பங்குபெறும் கவிதைகள்

நண்பர்களே! தமிழ்ச் சங்கம் அறிவித்த முதல் கவிதைப் போட்டியில் பங்கு பெற்று, இம்முயற்சிக்குத் தங்களுடைய ஆதரவை அளித்து சிறப்பித்து உள்ளீர்கள். முதற்கன் போட்டியில் பங்கு பெற்ற அனைத்து போட்டியாளர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் உரித்தாக்குகிறோம்.

கவிதைப் போட்டிக்குத் தங்களுடைய படைப்புகளை அனுப்புவதற்கான கால வரையறை நேற்றிரவு(31.08.2006) 11.30 மணியுடன் நிறைவு பெற்றது. இதுவரை மின்னஞ்சலில் வந்த 34 படைப்புகளும், தமிழ்ச் சங்கத்தில் தனிப் பதிவுகளாக வெளியிடப் பட்டிருக்கின்றன. இம்முப்பத்தி நான்கு கவிதைகளும் "கவிதைப் போட்டி-1"இல் பங்குபெறப் போகும் கவிதைகள் ஆகும். இக்கவிதைகளினின்று 20 கவிதைகளைத் தெரிவு செய்து இறுதி தேர்வுக்காக, கவிஞர் மு.மேத்தா அவர்களிடத்து அனுப்ப உள்ளோம். முதற்கட்ட கவிதை தேர்வை நடத்தும் பொறுப்பை, சங்கம் சாராத இரு வலைப்பதிவர்களிடத்து அளித்துள்ளோம். அவர்களைப் பற்றிய விவரங்கள் பின்வரும் நாட்களில் வெளியிடப்படும்.

போட்டியில் பங்குபெறும் கவிதைகளைப் போட்டியாளர்கள் தங்கள் சொந்த வலைப்பதிவுகளில் பிரசுரிக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டிருந்தோம். அதற்கு மதிப்பளித்து வலைப்பதிவர்களும் போட்டியில் பங்குபெறும் தங்கள் கவிதைகளை இது வரை வலையேற்றவில்லை. போட்டியாளர்கள் கடைபிடித்த இந்த கட்டுப்பாட்டுக்கும் எங்களுடைய வணக்கங்கள். இருப்பினும் தன்னுடைய படைப்பைப் பற்றிய கருத்துகளை அடுத்தவர்களிடமிருந்து தெரிந்து கொள்ளும் ஆர்வம் ஒரு படைப்பாளிக்குத் கட்டாயம் இருக்கும் என்பதை நாங்களும் உணர்கிறோம். இதுவரை போட்டியாளர்கள், கடைபிடித்த கட்டுப்பாட்டை இன்னும் ஓரிரு நாட்களுக்குத் தொடர வேண்டுமாய் வேண்டுகிறோம். வரும் திங்கட்கிழமைக்குள் முதற்கட்டத் தேர்வுகள் முடிந்துவிடும் என நம்புகிறோம். அது முடிவடைந்ததும், சங்கத்தில் அது குறித்த ஒரு அறிவிப்பு வெளியிடப்படும். அதன் பின்னர் போட்டியாளர்கள் "இன்னும் இருக்கிறது ஆகாயம்" என்னும் தலைப்பில் போட்டிக்கு அனுப்பிய கவிதைகளைத் தங்கள் சொந்த வலைப் பதிவுகளில் வலையேற்றிக் கொள்ளலாம்.

இதுவரை இப்போட்டிக்குத் தாங்கள் அளித்துள்ள ஆதரவுக்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றிகள்.

பி.கு: போட்டியில், பல்வேறு விதமான உணர்வுகளையும், கருத்துகளையும் வெளிப்படுத்தும் அருமையான கவிதைகள் பங்கேற்றுள்ளன என இச்சமயத்தில் தெரிவித்துக் கொள்ள கடமை பட்டிருக்கிறோம். அதே சமயம் போட்டியில் பங்குபெறாத மற்ற நண்பர்களும் இக்கவிதைகளைப் படித்து இன்புற வேண்டுகிறோம்.

4 ஊக்கங்கள்:

said...

போட்டியில் உற்சாகமாக கலந்து கொண்ட அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

said...

முடிவுகள் எப்போது தெரியும்?

said...

முடிவுகள் இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்படும்.

said...

நிறைய நாட்கள் ஆகி விட்டனவே..
முடிவுகள் எங்கே ??

தமிழ்சங்கத்தின் உழைப்பு பாராட்டத்தக்கது, நன்றி !!