Aug 29, 2006

சங்கம்- கவிதைப் போட்டி(1)-கவிதை- 12

எல்லாரும் நரகமா சொர்க்கமா என்று பயப்படும் நேரம்
நீ சொர்க்கத்தில் அனுமதி கேட்டு வாங்கி
அங்குள்ள ஆண்டவனை கலாய்ச்ச
சனி ஞாயிறு நரகத்திற்கு வருவாயென நினைக்கையில்
என் தலைக்கு மேல் இன்னும் இருக்குது ஆகாயம்
என்று அலுத்துக்கொள்கிறேன்

எனக்கு உன்னிடம் கேட்க நிறைய இருக்கிறது
புழு கடிக்கும் போது வலிக்காது தெரியும், ஆனால்
சிரிப்பாய் இருக்குமா - மண்ணுக்குள்?
உன்னோடு சேர்ந்து "உவ்வே" என்று உரக்கக் கூவி நகைக்க
என்னோடு வருவதற்கு முன், அவசரமாய் சென்றதேன்?
இன்னும் உன் இறப்பு என்னுள் இறங்காமல் போன மாயம்.

உன் அனுபவத்தைக் கொண்டு வளற நான் ஆசைப்படுகையில்
மரணம் மட்டுமே இனியதாய் நீ ஏற்கனவே சென்று பார்த்திருப்பதால்
இப்போது நான் வர மாட்டேன் நானாக
இன்னும் இருக்குதடி நான் படிக்கும் பாடம்
அன்றாடம் காண ஆயிரம் அற்புதங்கள்
அன்போடு விளையாட ஆயிரம் ஆனந்தம்
உன்னோட பேச ஆயிரம் இருக்கு மனக்காயம்
ஆனால் உனக்கும் எனக்கும் நடுவில் எரியாமல் என் காயம்

போட்டியாளர் சார்பில் பதிவிட்டது : நாமக்கல் சிபி

0 ஊக்கங்கள்: