Aug 30, 2006

சங்கம்- கவிதைப் போட்டி(1)-கவிதை- 19

இன்னும் இருக்கிறது ஆகாயம்!
இவை யாவும் பார்த்துக் கொண்டு
இன்னும்தான் இருக்கிறது ஆகாயம்!

சொந்த நாட்டில் சொந்த ஊரில்
சொந்த மொழியில் பேச நாணியே
நுனி நாக்கு மொழி பேசிடும்
உலுத்தரைப் பார்த்துக்கொண்டு
இன்னும் இருக்கிறது ஆகாயம்!


தமிழ் மறையாம் திருக்குறளை
தினம் ஒரு பத்து சொல்லி
"ஆடவா" எனும் அழைப்பினைப்
பார்த்தும் பாராதது போல் செல்லும்
நிலை கெட்ட மாந்தரைப் பார்த்துக்கொண்டு
இன்னும் இருக்கிறது ஆகாயம்!

தன் நடுவே "தான்" பெற்ற
தனதொரு குழந்தையினை [ப்ளூட்டோ]
இல்லையென்று தள்ளிவிட்டு
எள்ளி நகையாடும் அறிவிலிகளைக்
கண்டிங்கு சிரித்தபடி
இன்னும் இருக்கிறது ஆகாயம்!

யார் குடியை யார் கெடுக்க
ஏது நல்ல நேரமென்று
எண்ணங்களைக் கசக்கிப் பிழிந்து
இன்சொற்கள் நிரப்பி இட்டுவரும்
"பூக்களைப்" பார்த்து நொந்தபடி
இன்னும் இருக்கிறது ஆகாயம்!

#போட்டியாளர் சார்பில் பதிவிட்டவர் : நாமக்கல் சிபி

0 ஊக்கங்கள்: