Aug 31, 2006

சங்கம்- கவிதைப் போட்டி(1)-கவிதை- 22

மண்ணுலக மாந்தர் வகைவகையாய் மாசுகளை
அன்றாடம் அன்பாய் வளர்க்கின்றார்- மன்தகையின்
இத்தகைய கோலங்கள் எண்ணற்ற வேதனைக்கே
வித்தூன்றும் என்றே விளம்பு.

புகைமாசு இங்கே புவியை விழுங்கும்
பகைமாசு! ஐயகோ! பாவம்- குகைக்குள்ளே
மாட்டிய மானாகத் தானே தவிக்கின்றார்!
ஈட்டிமுனைச் சாவென்றே சொல்.

ஒலிமாசு காதுகளில் உட்புகுந்து சென்று
உளிபோல குத்திக் குடையும்- வழியெல்லாம்
நாடிநரம்புகளை தூண்டி துடிக்க வைத்து
ஓடவைக்கும் என்றே உணர்.

குளிர்சா தனப்பெட்டி குப்பைகள் கூளம்
தெளிக்கின்ற மாசுகளோ தேங்கி-அழிக்கின்ற
ஓலத்தை நாமோ உணராமல் வாழ்கின்றோம்!
காலந்தான் கண்ணருகில் காண்.

இப்படித்தான் எண்ணற்ற மாசுகளோ விண்ணகத்தை
பற்றித்தான் ஒசோன் படலத்தை- வெற்றிடமாய்
மாற்றினாலும் இன்னும் இருக்கிறது ஆகாயம்!
வாட்டுகின்ற மாசகற்றி வாழ்!
#போட்டியாளர் சார்பாக பதிவிட்டது இளா...

0 ஊக்கங்கள்: