Aug 29, 2006

கவிதை போட்டி -1 : இனிமையான அறிவிப்பு

தமிழ்ச் சங்கத்தின் சார்பாக நடத்தப் பெறும் கவிதைப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறும் படைப்புகளை, கவிஞர் மு.மேத்தா அவர்கள் தேர்வு செய்து தர இசைந்துள்ளார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இது குறித்த தகவல்கள் மீண்டும் ஒரு முறை தங்கள் நினைவிற்காக:

* போட்டிக்கான தலைப்பு "இன்னும் இருக்கிறது ஆகாயம்"


* படைப்புகளை அனுப்ப கடைசி நாள் 31-Aug-2006(நள்ளிரவு 23:30-IST)


* படைப்புகளை அனுப்ப - மின்னஞ்சல் முகவரி - kavithai.tsangam@gmail.com


விதிமுறைகள்:

1. கவிதைகள் மட்டுமே. ஹைக்கூ, புதுக்கவிதை, மரபுக்கவிதை, எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்

2. 20 வரிகளுக்கு மிகாமல் இருக்கவேண்டும்

3. ஆங்கில வார்த்தை கலவாமல் இருத்தல் நல்லது

4. ஒருவர் எத்தனை படைப்புகளை வேண்டுமென்றாலும் அளிக்கலாம்.

5. படைப்புகளை எங்களுக்கு யுனிகோட் எழுத்துருவில் மின்னஞ்சல் மூலம் தனி மடலிடல் வேண்டும்.

6. தனி மடலில் உங்கள் வலைப்பதிவு முகவரி இருத்தல் அவசியம்.(ஆங்கிலத்தில் இருப்பினும் யுனிகோட்டில மாற்றிக்கொள்ள ஏதுவாக அனுப்பி வைக்கவும்)

7. உங்கள் படைப்பு, தமிழ்ச் சங்கத்தில் தனிப்பதிவாக வெளியிடப்படும்.

8. ஜாதி, மத, சமய, தனி நபர் தாக்குதல் கொண்ட பதிவுகள் போட்டியில் சேர்க்கப்பட மாட்டாது.


இது வரை போட்டியில் பங்கு பெறுவதற்காக போட்டியாளர்களால் அனுப்பப் பட்ட கவிதைகளை வாசிக்க இங்கு சுட்டவும்.
சங்கம்- கவிதைப் போட்டி(1)-கவிதை-1
சங்கம்- கவிதைப் போட்டி(1)-கவிதை-2
சங்கம்- கவிதைப் போட்டி(1)-கவிதை-3
சங்கம்- கவிதைப் போட்டி(1)-கவிதை-4
சங்கம்- கவிதைப் போட்டி(1)-கவிதை-5
சங்கம்- கவிதைப் போட்டி(1)-கவிதை-6
சங்கம்- கவிதைப் போட்டி(1)-கவிதை-7
சங்கம்- கவிதைப் போட்டி(1)-கவிதை-8


கவிதை போட்டி தேர்வு விதிகளுக்கு உட்பட்டு, போட்டியாளர்களின் பெயர்கள் வெளியிடப் படவில்லை. இருப்பினும் கவிதையினை வாசிப்பவர்கள், கவிதைகளைப் பற்றிய தங்களது கருத்தினை வழங்கி படைப்பாளர்களை ஊக்குவிக்குமாறு வேண்டுகிறோம்.

0 ஊக்கங்கள்: