Aug 31, 2006

சங்கம்- கவிதைப் போட்டி(1)-கவிதை- 21

அண்ணி உங்க
தங்க அட்டிகையை
வரவழியிலே தொலச்சுட்டேன்

கண்ணைக் கசக்கிய நாத்தியிடம்
போனால் போகிறது
நீ பத்திரமாக வந்தாயே என்றேன்

புழக்கடையில்
துணி துவைக்கையில்
சமையலறையில்
மாமியாரின் குரல்
அவர் மகனிடம்

ஒரு ஆர்ப்பாட்டம், கூச்சல்
எதுவுமில்லை
பித்தளைக்கு மெருகு
போட்டு அவங்க வீட்டில
கொடுத்துட்டாங்களோ

தலை மேலே
பறந்த குருவிகளை
அண்ணாந்து பார்த்தேன்


இன்னும் இருக்கிறது ஆகாயம்


#போட்டியாளர் சார்பாக பதிவிட்டது இளா...

0 ஊக்கங்கள்: