Aug 30, 2006

சங்கம்- கவிதைப் போட்டி(1)-கவிதை- 17

அன்று நீ என்னை
அழைத்தபோது
வேறு ஏதோ கோபத்தால்
தொலைபேசியில்
உன்னிடம் எரிந்து விழுந்தார்
என் துணைவர்

வீடு திரும்பி
இதை அறிந்துகொண்டபின்
உன் எண்ணை அழைத்தால்
பதிலில்லை
அதற்கு அடுத்து சில நாட்களும்
அப்படியே

நிலையை விளக்கி
மின்மடல் கொடுத்தபோது
குழந்தைபோல் விளக்கமா
தவறாக புரிந்துகொண்டாய்
தொலைபேசி சரியில்லை
என்று உன் உடனடி மின்மடல்

மேகங்கள் ஓடினாலும்
இன்னும் இருக்கிறது ஆகாயம்

#போட்டியாளர் சார்பாக பதிவிட்டது இளா...

0 ஊக்கங்கள்: