Aug 30, 2006

சங்கம்- கவிதைப் போட்டி(1)-கவிதை- 15

சீறிச் சென்ற நதியும், ஓங்கி வளர்ந்த மலையும் - உயிர் தோன்றுவதற்காக மாறியது
தோன்றிய உயிர் - நீரிலிருந்து நிலத்திற்கு, ஊர்வனவாவும் பறப்பனவாவும் - பரிணாம வளர்ச்சிக்காக மாறியது,

பரிணாம வளர்ச்சி குரங்கிலிருந்து மனிதனாய் - சிந்தனை தோன்றுவதற்காக மாறியது
தோன்றிய சிந்தனை - கல்லில் இருந்து கோட்டையாய், புல்லிலிருந்து பயிராய் - சமுதய வளர்ச்சிக்காக மாறியது,

சமுதய வளர்ச்சி - எண்ணிலிருந்து எழுத்தையும், எழுத்திலிருந்து கல்வியையும் - வாழ்க்கை வளமாக தோன்றியது
தோன்றிய வாழ்க்கை - கோட்டையிலிருந்து வானூர்தி தொடுத்து, பயிரிலிருந்து மருந்து எடுத்து - மேன்மையாய் மாறியது,

மேன்மையோ -
"மாறுமே இந்த பஞ்ச பூதமே, மாறாத நானே இங்கு வேதமே" - என்று
கொக்கரித்த மாற்றத்தையே,
காலமென்னும் கருவியால் மாற்றியது,

உயிர் தோன்றிய அன்றும் இருந்தது ஆகாயம் , "மாற்றமே" மாறிய -
"இன்றும் இருக்கிறது ஆகாயம்!!"


#போட்டியாளர் சார்பாக பதிவிட்டது இளா...

0 ஊக்கங்கள்: