Aug 28, 2006

சங்கம்- கவிதைப் போட்டி(1)-கவிதை-7

மேகத்தால் எங்கும் கருப்பு நிறமாகியும்
விமான இயந்திரங்களின் இரைச்சலால் செவிடாகியும்
நீதி கேட்போரின் நாக்கை அறுப்பதினால் ஊமையாகியும்
பட்டினி மரணங்களின் ரத்தக்கண்ணீரால் குருடனாகியும்

எந்த ஜாதி என்றறியும் சோதனையில்
ஆண்மை பெண்மை இரண்டுமிழந்து திருநங்கையாகியும்

கோபத்தால் தனது கை கால்களை தானே முறித்து ஊனமுற்றதென்றாகியும்

பிஞ்சுகுழந்தைகளின் படுகொலைகள்!
எங்கும் நடக்கும் யுத்தங்கள்! மற்றும் மனிதத்தின் மரணங்கள்!
இவையெல்லாம் கண்டு கலங்கிய இதயம்
பொடிப்பொடியாய் உடைந்தும்

கற்பழிக்கப்பட்ட ஏழைப்பெண்களின் பிரசவவலியால் துடித்தும்
எங்கும் எல்லா ஜீவராசிகளின் அழும் குரல்கள் கேட்டு தவித்தும்

ஓசோனின் ஓட்டைவழியே சொல்ல முடியா வலிகளை சகித்தும்
சூரிய வெப்பத்தில் கடினமாய் உருகியும்
போராடிப் போரடி மிஞ்சியிருக்கும் கொஞ்சம் உயிருடன்
இன்னும் இருக்கிறது ஆகாயம் !

#போட்டியாளர் சார்பாக பதிவிட்டது இளா...

0 ஊக்கங்கள்: