Aug 29, 2006

சங்கம்- கவிதைப் போட்டி(1)-கவிதை- 13

மறுமொழிகளை மட்டுறுத்தலாம் என்றெண்ணி
பின்னூட்டப் பெட்டி திறந்தேன், ஒரு பின்னிரவில்!
வெறுமை வந்தென் முகத்தில் அறைந்தது
துணையற்ற நெடும்பயணம் போன்று

கடை விரித்தேன் கொள்வாரில்லை...
முண்டாசுக் கவியின் வலி புரிந்ததெனக்கு!

இலையுதிர் காலத்து சருகு போலே
பெயரற்று போய் விடும் உயர் நோக்கோடு
வந்து சென்றிருப்பர் பலர்
நான் சென்று வருவதைப் போன்றே

எண்ணங்களை பதிவு செய்யாது
எண்ணிக்கைகளை மட்டுமே
கணக்கில்வைத்துக் கொள்ளும்
என் *'வருகை எண்ணி' , சொல்லிற்று...

கவிதையொன்று வடித்து நிமிருகையில்
கடவுளானேனென கர்வம் வந்து செல்லும்
கண நேரமேயானாலும், அதுவும் சொல்லிற்று
இன்னும் இருக்கிறது ஆகாயம்!

கண்சிமிட்டும் நட்சத்திரங்களும்
தேய்ந்து வளரும் நிலவுமில்லாவிடினும்
இன்னும் இருக்கிறது ஆகாயம்,
இளஞ்செங்கீற்றாய் விடியலுடன்!


போட்டியாளர் சார்பில் பதிவிட்டது : நாமக்கல் சிபி.

3 ஊக்கங்கள்:

said...

//கவிதையொன்று வடித்து நிமிருகையில்
கடவுளானேனென கர்வம் வந்து செல்லும்
கண நேரமேயானாலும், //
அருமையான வரிகள்:)

said...

Excellent thought and words.

said...

//கடை விரித்தேன் கொள்வாரில்லை...
முண்டாசுக் கவியின் வலி புரிந்ததெனக்கு!
//

இரவல் வாங்கிய இந்த வரிகளிலும், கீழ்கண்ட இவ்விரு வரிகளிலும் கவிதை தன் கருத்தை சொல்லிவிட்டதென்று நினைக்கிறேன்

//கவிதையொன்று வடித்து நிமிருகையில்
கடவுளானேனென கர்வம் வந்து செல்லும்//

அருமை மற்றும் புதுமையான சிந்தனை, ஒரு வலைப்பூவினரால் மட்டுமே எழுத முடிகின்ற கவிதையென்று நினைக்கிறேன்!

வெற்றி பெற வாழ்த்துக்கள்